மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கை சேர்ந்த திருவுள சபை திருத்தொண்டர் அன்றூ பிராங்லின் பத்மலிங்கம் அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர் அன்றூ பிராங்லின் பத்மலிங்கம் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், திருவுளப்பணியாளர் சபை முதல்வர் அருட்தந்தை மார்க் ஆந்திரே, சபையின் இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தையின் உறவினர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin