செப ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான திருயாத்திரையும் செபநாள் அனுஸ்ரிப்பும் 23ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் மடுதிருத்தலத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றதுடன் ‘சிறுவர்கள் வாழ்வில் செபம்’ எனும் தலைப்பில் அருட்தந்தை யூட் குரூஸ் அவர்களால் கருத்துரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 60ற்கும் மேற்பட்ட திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin