கிளறேசியன் துறவற சபை நிறுவுனர் புனித அன்ரனி மரிய கிளாரட் திருவிழா கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை சுண்டுக்குளியில் அமைந்துள்ள கிளறேசியன் துறவறசபையின் புனித கிளாரட் அகத்தில் நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து கிளாரட் சிறுவர் கதம்ப சிறார்களின் ஆக்கங்களை தாங்கிய ‘துளிகள்’ நூல் வெளியீடும் நடைபெற்றது.

கிளறேசியன் சபை அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இந்நூலை வெளியிட்டு வைக்க இந்நூலின் முதற்பிரதியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலுக்கான ஆய்வுரையை திருமதி விக்ரோறியா பிறெட்லி அவர்கள் வழங்கியிருந்தார்.

By admin