சில்லாலை பங்கின் மூளாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

14ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீரும் இடம்பெற்றன.

By admin