மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான நான்காம் கொளனி சின்னமடு மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜுனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சிலுவை திருத்தலத்தில் இருந்து நான்காம் கொளனி சின்னமடு மாதா ஆலயம் வரை பாதயாத்திரையும் தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நிக்கலஸ் ஜுட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அத்துடன் சம்மாந்துறை கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்ரோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை நவரெட்ணம் நவாஜி அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

 

By admin