யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திரம் வைத்திருப்போர் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளும்படி யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை நிர்வாகியும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

சேமக்காலையில் பெரும் எண்ணிக்கையிலான கல்லறைகள் பல வருடங்களாக எதுவித பாராமரிப்போ திருத்தமோ இல்லாமல் சிதைவுற்றும் பெயர் விபரம் எதுவுமோ இல்லாமலும் உள்ளன என்றும் கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திரம் வைத்திருப்போர் பேராலய பணிமனையில் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கார்த்திகை 2ஆம் திகதி இறந்த விசுவாசிகள் தினத்திற்கு பின்னரும் புதுப்பிக்கப்படாத கல்லறைகள் பேராலயத்தால் பொறுப்பெடுக்கப்பட்டு தேவைப்பட்டோருக்கு வழங்கப்படுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin