யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் அமைந்துள்ள கொலைவிலக்கி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

12ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை றெக்சன் அவர்களும் திருவிழா திருப்பலியை மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin