தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி இடம்பெறுமெனவும் 28ஆம் திகதி நற்கருணைவிழாவும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படுமெனவும் பரிபாலகர் தெரிவித்துள்ளார்.

By admin