பாவலர்மணி திருமகள் ரூபா அன்ரன் அவர்களின் ‘திருவருள் இயேசு அந்தாதி’ எனும் மரபு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான நயப்புரையை இந்திய நாட்டை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான முனைவர் பாரதி கிருஸ்ணகுமார் அவர்கள் வழங்கினார்.

By admin