இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு தெரிவான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனும் பாசையூர் பங்கை சேர்ந்தவருமான செல்வன் அல்காந்தறா விக்மிலன் அவர்களுக்கான கௌரவிப்பு கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

ஆலய இளையோர் கழகத்தின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செல்வன் விக்மிலன் தவில் நாதஸ்வர வாத்தியத்துடன் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டு பங்குதந்தையால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இவர் 15 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு தெரிவாகி இந்தியாவில் நடைபெற்றுவரும் போட்டியில் விளையாடி வருவதுடன் அவ்வணியின் தலைவராகவும் தெரிவாகியுள்ளார்.

By admin