மன்னார் மறைமாவட்டம் முருங்கன் மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு தியானம் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முருங்கன் பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் லியோன் ஆகியோரின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, கருத்துரைகள், கலந்துரையாடல் மற்றும் குழு செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.

முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அலெக்சாண்டர் பெனோ அவர்கள் கலந்து சிறப்புரையாற்றியதுடன் 100 வரையான மறையாசிரியர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin