செம்பியன்பற்று நெல்லியான் புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

28ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி உருவாக்குனர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin