யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை டேமியன் அவர்கள் கலந்து ஆன்மீக வாழ்வு பற்றி கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து நற்கருணை வழிபாடும் குருக்களுக்கான கூட்டமும் இடம்பெற்றன.

By admin