பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி. டினோ மற்றும் திரு. நெல்சன் அகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்வில் 35 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin