சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை சில்லாலைப் பங்குத்தந்தை அருட்தந்தை பிறையன் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற நற்கருணை ஆராதனையை யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

By admin