யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கபட்ட பாசறை நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற
இப்பாசறை நிகழ்வில் சிறார்களுக்கான குழு விளையாட்டுக்கள், விவிலிய விளையாட்டுக்கள், கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 76 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin