இளவாலை அசிசிபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குரு அருட்தந்தை றெமோசன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin