இந்தியாவிலிருந்து வருகைதந்து மன்னார் வங்காலை பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் தற்காலிக பணித்தள திறப்புவிழா 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லகோன்ஸ் பிகுறாடோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்கள் கலந்து பணித்தளத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி, அருட்சகோதரிகள், அருட்தந்தையர்கள், பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin