யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நீண்டகாலம் பயன்தரும் பழமர கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் நடைபெற்றது.

கியூடெக் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 18 விவசாயிகளுக்கு நீண்டகாலப் பழமர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், வேலணை பிரதேச செயலர் திரு. சிவகரன், பல்சமயத் தலைவர்கள் பிரதேசசபை மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin