யாழ். மறைமாவட்ட குருவும் தற்போது உரும்பிராய் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிவரும் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையின் குடும்ப உறவினர்கள், ஆயர், குருக்கள், துறவிகள், இறைமக்களெனப்
பலரும் கலந்து கொண்டதுடன் அருட்தந்தையின் குருத்துவ யூபிலி தினத்தை நினைவுகூர்ந்து “வழிநடந்த பயணப்பாதை சுவடுகள்” மலரும் வெளியிடப்பட்டது.

By admin