யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் திரு. ஞானப்பிரகாசம் யோகநாதன், திரு. லிகோறி புறூணோ பாபு மற்றும் திரு. றோக் அருளானந்தம் டினேஸ்ராஜ் ஆகியோர் நற்கருணை பணியாளர்களாக தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் வழிநடத்தலில் நற்கருணைப்பணியாளர்களாக இவர்கள் உருவாக்கப்பட்டு, யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

By admin