கொக்குவில் புனித சின்னப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருநெல்வேலி பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலமையில் யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை மைக்டொனால்ட் அவர்களின் உதவியுடன் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை மக்டொனால்ட் அவர்களும் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin