யாழ்ப்பாணம் – கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறைப் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை றெக்ஸன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin