திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு மறைக்கல்வி நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பன நடைபெற்றதுடன் 100 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கில் மறைக்கல்வி மாணவர்களுக்கான இந்நிகழ்வு மாதாந்தம் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin