Month: January 2024

நல்லூர் பங்கில் தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பல்லவராயன்கட்டு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டொன் பொஸ்கோ பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அருட்தந்தையர்கள் மெல்வின் றோய் மற்றும் நதீப் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி முன்னாள் பங்குத்தந்தையுமான அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் அன்புத்தாயார் கென்றி மரிய கார்மலா அவர்கள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

வடக்கு கிழக்கு ஆயர் மன்றக் கூட்டம்

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக் கூட்டம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் மறைமாவட்டங்களை இணைத்து முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் பற்றி…

யாழ் மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலைய திருமண சேவை

யாழ் மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் திருமண பந்தத்தில் இணையவுள்ளோருக்கான திருமண சேவையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தெரிவித்துள்ளார். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் தங்களுக்கான தகுந்த வாழ்கைத்துணையை தேடுவதற்கு களம் அமைத்துக்கொடுப்பதை நோக்காக…