Month: October 2020

‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க விசேட வழிபாடு

‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க ஆண்டவரின் அருள் வேண்டி செபிக்கும் விசேட திருப்பலி 24.10.2020 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அடிகளார் வாழ்நாள் பேராசிரியர்

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிவரும் அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அவர்கள் வாழ்நாள் பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நியமனம் பெற்றுள்ளார்.

அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பாதுகாவலரான புனித. யோண் மரிய வியன்னியின் திருநாள் 24-09-2020 வியாழனன்று யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 9.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இத்திருப்பலியைத் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றிய ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின்…

200 ஆண்டு நிறைவு நாள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு 19.09.2020 சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதியம் 12.00 மணியளவில் மடுத்திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.