Month: May 2018

குருத்துவம் திருமணம்; கொடையும் மறைபொருளும் நூல் வெளியீடு

மே.30.2018. தேவரட்ணம் செல்வரட்ணம் அடிகளார் எழுதிய குருத்துவம் திருமணம்; கொடையும் மறைபொருளும் என்ற நூல் வெளியீடு 28 மே 2018 அன்று கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் கல்லூரி அதிபர் ரீ.ஜே. கிருபாகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிந்த இடம் அல்ல, பலரின் தியாகங்களினால் விடுதலைக்கான விதை விதைக்கப்பட்ட இடம்.

19.மே ,2018. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத் திருப்பலி 18.05.2018 மாலை 5.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. பா.யோ.ஜெபரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

விண்ணேற்றத்தின் மனிதர்கள், நற்செய்தியை எடுத்துச் செல்பவர்கள்

15.மே ,2018. வானத்தை அண்ணாந்து நோக்குவதையும், உடனடியாக, இவ்வுலகை நோக்கி நம் பார்வையைத் திருப்பி, இயேசு நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ள பணிகளை ஏற்று நடத்த முன்வருவதையும், இயேசுவின் விண்ணேற்ற விழா நமக்கு நினைவூட்டுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரும்பிராய் பங்கில் இளையோர் ஒன்றிய விளையாட்டு போட்டி

15.மே.2018.இளையோர் ஆண்டை முன்னிட்டு உரும்பிராய் பங்கு புனித மிக்கேல் ஆலய இளையோர் ஒன்றியதினால் ஏற்பாடு செயப்பட்ட விளையாட்டு போட்டி புனித மிக்கேல் ஆலய முன்றலில் 13.05.2018 அன்று பிற்பகல் 3.௦௦ மணி அளவில் பங்கு தந்தை அருட்பணி பத்திநாதர் தலைமையில் சிறப்பாக…

மறைமாவட்ட நிர்வாக பணிகளில் பொதுநிலையினர் ஈடுபட முன்வரவேண்டும்

மே,07,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த மாநாடு நேற்றையதினம் (மே,06,ஞாயிற்றுக்கிழமை) பாதுகாவலன் மண்டபத்தில், மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது . நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர்…