நோர்வே திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கலைமாலை நிகழ்வு கடந்த மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நோர்வே நாட்டிலுள்ள பேர்கன் நகர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

நோர்வே மன்ற தலைவர் திரு. யூலியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பரதாலயா மற்றும் அன்னம் கலைக்கூடங்கள் வழங்கிய நடனங்கள், இசை நிகழ்வுகளுடன் திரு. தொம்சன் பாலச்சந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலில் பறம்பு மலை காவலன் (வேள்பாரி) நாடகமும் மேடையேற்றப்பட்டன.

நோர்வே நாட்டில் 20 வருடங்களாக பன்னாட்டு கலைஞர்களை கொண்டு இயங்கும் Farge spill நிறுவன பொறுப்பாளர் Sissel Saue அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பேர்கன் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பீஸ்மன், பேர்கன் சித்தி விநாயகர் ஆன்மீக குருக்கள் ஆனந்த சர்மா, பேர்கன் வெளிநாட்டவர் அமைப்பின் பிரதிநிதிகள், திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin