யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

MSF நிறுவனத்தின் தென் ஆசிய பிராந்திய தலைவர் திரு. தவரட்ணம் மதிமாறன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இலங்கை துடுப்பாட்ட தரவு ஆய்வாளர் திரு. விஜயசிங்கம் விதுபாலா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin