புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருனண வழிபாடு நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை மடுத்தீன் பத்தினாதர் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரி அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin