யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் குழு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து அங்கு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிவரும் சூழல் குறித்தும், இப்பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
ஜப்பான், சுவிஸ் மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளுக்கான தூதுவர்களும் அவர்களின் பிரிதிநிகளும் இணைந்துகொண்ட இச்சந்திப்பில் தமிழ் மறைமாவட்ட ஆயர்களான பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், பேரருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ, பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆகியோருடன் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் கலந்துகொண்டார்.

By admin