இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னைமரி ஊழியர் சபை அருட்சகோதரிகளின் பணிகளை விஸ்தரிக்கும் நோக்கோடு விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த பணித்தள மடத்திற்கான கட்டுமானபணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து பணித்தள மடத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin