விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித இராயப்பர் முன்பள்ளி கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏடுதொடக்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்தியாவில் இருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணி புரியும் வியாகுல அன்னை மரி ஊழியர் சபை அருட்சகோதரிகளினால் நடாத்தப்படும் இம்முன்பள்ளியில் இக்கல்வியாண்டின் கற்றல் செயற்பாடுகளுக்காக 30மாணவர்கள் இணைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin