மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை வேப்பங்குள பங்கில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வேப்பங்குளம் பங்குத்தந்தையும் வவனியா மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, கருத்தமர்வு, கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 90 வரையான மறையாசிரியர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin