யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வழிகாட்டல் செயலமர்வுகள் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றன.

நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் இடம்பெற்ற இக்கருத்தமர்வுகள் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, பருத்தித்துறை புனித தோமையார் றோ.க பெண்கள் கல்லூரி, முழங்காவில் அன்பகம் மற்றும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சமகாலத்தில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் 250வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin