கனடா, ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகமும் புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகமும் புனித ஆரோக்கிய அன்னை பங்கும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் மிட்லண்ட் மறைசாட்சிகளின் 37வது வருடாந்த திருத்தல திருப்பயணம் எதிர்வரும் யூலை மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்திருப்பயண நிகழ்வின் ஆரம்பத்தில் காலை திருச்செபமாலையும் தொடர்ந்து மதியம் திருப்பலியும் மாலை நற்கருணை வழிபாடும் நடைபெறவுள்ளன.

இத்திருப்பயண நிகழ்வில் கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் வட அமெரிக்காவிலிருந்தும் வருகைதரும் தமிழ் கத்தோலிக்க மற்றும் இந்து சமய மக்கள் இணைந்து பங்கெடுப்பார்கள்.

By admin