வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் “இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம்” என்னும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் வில்பத்து தேசிய பூங்காவையும், அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் பார்வையிட்டனர்.
எல்லோருக்கும் பொதுவான வீடாகிய பூமியை பாதுகாப்பதும் அதில் வாழும் உயிரினங்களை அன்பு செய்வதும் மனிதனின் தலையாய கடமை என்பதை நோக்காகக் கொண்டு முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் 60 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin