வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி கடந்த 20ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 13 வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனும் புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவனுமான செல்வன் நிலக்சன் 20வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

By admin