யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஒளி விழா சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொமிற்சிய தலைவர் சகோதரி புளோறன்ஸ் ரஞ்சினி நீக்கலஸ் அவர்களிள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தனராகவும் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், யாழ்.மறைமாவட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்கத்தவர்களென 700 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin