யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக்கூட்டம் 27ஆம் திகதி சனிக்கிழமை  யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் கழகத் தலைவர் திரு. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை றெனால்ட் அவர்கள் கலந்து கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து மறைக்கோட்ட கழக செயற்பாடுகள் பற்றியும் மறைமாவட்ட பொதுநிலையினர் மாநாடு மற்றும் மறைக்கோட்ட எழுச்சி நாள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படன.

By admin