யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளை சேர்ந்த அருட்ககோதரிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 70 வரையான அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.

By admin