யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி ஆண்டை நிறைவுசெய்த அருட்தந்தையர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அருட்தந்தையர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 100க்கும் அதிகமான குருக்கள் கலந்துகொண்டனர்.

By admin