யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க வைத்திய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க வைத்திய அமைப்பை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

திருப்பலியை தொடர்ந்து வைத்தியர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், வைத்தியர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இவ்அமைப்பை உருவாக்குவது தொடர்பான முன்னாயத்த கூட்டம் கடந்த 25ஆம் திகதி Zoom செயலி ஊடாக இடம்பெற்றதுடன் தற்போது 60ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இவ்அமைப்பின் அங்கத்தவர்களாக இணைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin