யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து சிறப்புத் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து சட்டத்தரணிகளுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், நீதிபதிகள், சட்டத்துறை மாணவர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பு மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமாக செயற்பட்டு சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவை தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin