யாழ் மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் திருமண பந்தத்தில் இணையவுள்ளோருக்கான திருமண சேவையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் தங்களுக்கான தகுந்த வாழ்கைத்துணையை தேடுவதற்கு களம் அமைத்துக்கொடுப்பதை நோக்காக கொண்டு இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவங்களை அகவொளி நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விண்ணப்பப்படிவத்திலுள்ள விபரங்களை நிரப்பி அனுப்புமிடத்து மறைமாவட்ட பாதுகாவலன் பத்திரிகையில் “மணமகன் தேவை”, “மணமகள் தேவை” என்ற தலைப்பில் பெயர், விபரம், புகைப்படம் போன்றவை தவிர்ந்த ஏனைய விடயங்களான வயது, சமயம், கல்வித்தகைமை, தொழில் மற்றும் பிரதேச செயலகப்பிரிவு என்பவை பிரசுரிக்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் இச்சேவையை பெறவிரும்புபவர்கள் அகவொளி நிலையத்தை தொடர்புகொள்ளும் பட்சத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin