யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரோல் கீதங்கள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இளையோர்களென 110 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin