யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நிஜந்தன் பிரகாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையின் யாழ்.மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin