யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பேராலய வளாகத்தில் புதிதாக அமையப்பெற்ற ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16 அன்பிய குழுக்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், அயற்பங்கு பிரதிநிதிகளென பலரும் கலந்து செபித்தனர்.

By admin