யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான நத்தார் சிறப்பு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் அருட்தந்தை இருதயதாஸ் அவர்கள் தலைமையில் போரலயத்தில் நடைபெற்ற நன்றித்திருப்பலியை தொடர்ந்து ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இவ்ஒன்றுகூடல் நிகழ்வில் கரோல் பாடல்கள் மகிழ்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகளுடன் முதியோர்களுக்கான அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
100ற்கும் மேற்பட்ட முதியோர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin