யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய மண்டபத்தை அசீர்வதித்து திறந்துவைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட இம்மண்டபத்திற்கு ஆயர் யஸ்ரின் மண்டபம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் இதன் பெயர் பலகையை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin